ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக தியேட்டர் உரிமைகள், இசை உரிமைகளை விற்பதன் மூலம் மட்டுமே வருவாய் வந்தது. அதன்பிறகு ரேடியோ, டிவி, வீடியோ, சாட்டிலைட், ஓடிடி உள்ளிட்ட பல உரிமைகளை விற்பதன் மூலம் வருவாய் வந்தது. காலத்திற்கேற்ப, அறிவியல் மாற்றங்களுக்கேற்ப அவற்றுடன் சினிமாவும் இணைந்து பயணித்து வருவாயை ஈட்டி வருகிறது.
தற்போது சாட்டிலைட் டிவிக்களை விடவும், ஓடிடி உரிமைகள் மூலம்தான் அதிக விலைக்கு படங்கள் விற்கப்படுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. மற்ற படங்களின் உரிமைகளை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப்பட்ட படங்களை வரும் வருவாயை பங்கு பிரிப்பது என்ற அடிப்படையில் விற்கிறார்கள்.
சமீபகாலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும் படுதோல்வியை சந்திப்பதால் அப்படங்களின் உரிமைகளை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் புதிய முடிவுகளை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாக முன்கூட்டியே படங்களின் ஓடிடி உரிமை வாங்கினாலும் பேசியபடி முழு தொகையைக் கொடுக்காமல் பட வெளியீட்டிற்குப் பின்பு அந்தப் படத்தின் வரவேற்பைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என யோசித்து வருகிறார்களாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் தோல்விதான் இதற்குக் காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஓடிடி உரிமைகளை முன் கூட்டியே விற்க முடியாததால் சில படங்களை ஆரம்பிப்பதையும் தள்ளிப் போட்டு வருகிறார்கள். சில படங்களை 'டிராப்' செய்தும் விட்டார்கள். ஒரு படத்தின் முதலீட்டில் கணிசமான தொகை என்பது ஓடிடி உரிமை மூலமே வருகிறது. இந்நிலையில் ஓடிடிக்கு புதிய படங்களைக் கொடுக்க 8 வார இடைவெளி என தயாரிப்பாளர் சங்கம் சொன்னது போல வந்தால் ஓடிடி உரிமைகளை வாங்குவதிலிருந்து நிறுவனங்கள் பின்வாங்கும் எனத் தெரிகிறது.
அதற்குப் பதிலாக சொந்தமாகவே படங்கள் அல்லது வெப் சீரிஸ்கள் ஆகியவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம் என சில நிறுவனங்கள் உள்ளுக்குள் ஆலோசித்து வருகிறார்களாம். 2025ல் ஓடிடி உரிமைகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்பதே தற்போதை நிலை.