அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
தமிழ், தெலுங்கு இந்த இரண்டு மொழி சினிமாக்களுக்கும் பல ஒற்றுமை உண்டு. தமிழ்ப் படங்கள் தெலுங்கிலும், தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாவது வழக்கம். இரண்டு மொழி நடிகர்களும் மாறி மாறி நடிப்பது வழக்கம். பல தமிழ்ப் படங்கள் ஐதராபாத்தில்தான் படமாகிறது. பல தெலுங்கு நடிகர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
தெலுங்கில் சில முக்கிய படங்கள் வெளியானால் அவற்றை அங்குள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படியான பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது. தங்களுக்கு நெருக்கமான சிலரது படங்களைப் பற்றி மட்டுமே சிலர் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள்.
தனுஷின் 50வது படமாக கடந்த வாரம் வெளியான படம் 'ராயன்'. இங்கு கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம். தெலுங்கிலும் டப்பிங் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பற்றி தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, “ராயன், தனுஷ் அற்புதமாக இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேஸ்ட்ரோ ரஹ்மான் சிறப்பானதொரு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,” என்று பாராட்டியுள்ளார்.
தெலுங்கு நடிகராக இருந்தாலும் சென்னையில் பிறந்த வளர்ந்தவர் என்பதால் அடிக்கடி தமிழ்ப் படங்களைப் பார்த்து அவற்றைப் பாராட்டும் குணம் கொண்டவர் மகேஷ் பாபு. அவரைப் போல இங்குள்ள நடிகர்கள் தமிழ்ப் படங்களைப் பாராட்டுவது இல்லையே ஏன் என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.