டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? |

சமீப நாட்களாக படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு தளத்தில் தொழிலாளர் ஒருவர் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். இந்தநிலையில் மலையாளத்தில் தற்போது நடைபெற்று வரும் 'ப்ரொமான்ஸ்' படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடித்த இளம் நடிகர்கள் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜுன் ஜோஸ் என்பவர் இயக்கி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள பிரபலமான எம் ஜி ரோட்டில் நள்ளிரவு முதல் நடைபெற்று வந்தது.
லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் ஹீரோவின் நண்பனாக படம் முழுவதும் பயணித்த சங்கீத் பிரதாப், ரோமாஞ்சம் படத்தில் கதாநாயகனாக நடித்த அர்ஜூன் அசோகன் உள்ளிட்ட ஐந்து பேர் பங்கு பெற்ற கார் சேசிங் காட்சி ஒன்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென ஒரு திருப்பத்தில் இரண்டு பைக்குகள் எதிர்பாராமல் நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து கட்டுப்பாட்டை இழந்து அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பின்னால் துரத்தி வந்த காரும் இவர்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் உள்ளே பயணித்த ஸ்டண்ட் மேன் மற்றும் மேலே சொன்ன நடிகர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நடிகர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதி விரைவாக வண்டி ஓட்டியதாக கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடைபெற்றாலும் இது வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.