காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக இவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ராம் பொத்தினேனியை வைத்து டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமாகிய சிறுத்தா படத்தில் ஜூனியர் ராம் சரணாக நடித்தவர். அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2015ல் ஆந்திரா பொறி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 2018ல் தனது தந்தை இயக்கிய மெகபூபா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஓரளவு வெற்றி படமாக அமைந்தது.
ஆனாலும் அதன் பிறகு அவர் நடித்த ரொமான்டிக் மற்றும் சோர் பஜார் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஆகாஷ் பூரி, இன்றிலிருந்து தனது பெயரை ஆகாஷ் ஜெகன்நாத் என மாற்றிக் கொண்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகில் தனக்கு சரியான முன்னேற்றம் இல்லை என்பதால் இந்தப்பெயர் மாற்றம் தன்னை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பிக்கை கொண்டு தனது பெயரை தற்போது அவர் மாற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது.




