காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது மனதில் தோன்றும் கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாம் பிறக்கும்போதே கை கால் தலை போன்று இன்னொரு விஷயமும் கூடவே பிறந்திருக்கிறது. அதுதான் பொறாமை. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை. பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை. அலுவலகத்தில் ஒருவருக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டால் அதை பார்த்து பொறாமை . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரி. உங்கள் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். இந்த பொறாமை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது என்று கேட்டீர்கள் என்றால், வாழவே முடியாது. இதற்கு தீர்வு மருந்தும் கிடையாது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதேபோல் பொறாமையை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அதோட பவரும் ஜாஸ்தியாகி கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் பொறாமையை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆமாம் உன்னை பார்த்தது நான் பொறாமைப்படுகிறேன். நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையை கவனித்தால் கொஞ்சநாளில் மேஜிக் போல இந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் செல்வராகவன்.