நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது மனதில் தோன்றும் கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாம் பிறக்கும்போதே கை கால் தலை போன்று இன்னொரு விஷயமும் கூடவே பிறந்திருக்கிறது. அதுதான் பொறாமை. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை. பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை. அலுவலகத்தில் ஒருவருக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டால் அதை பார்த்து பொறாமை . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரி. உங்கள் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். இந்த பொறாமை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது என்று கேட்டீர்கள் என்றால், வாழவே முடியாது. இதற்கு தீர்வு மருந்தும் கிடையாது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதேபோல் பொறாமையை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அதோட பவரும் ஜாஸ்தியாகி கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் பொறாமையை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆமாம் உன்னை பார்த்தது நான் பொறாமைப்படுகிறேன். நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையை கவனித்தால் கொஞ்சநாளில் மேஜிக் போல இந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் செல்வராகவன்.