ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? |

மலையாள சின்னத்திரை நடிகை அப்சரா. 'சாந்த்வனம்' தொடர் மூலம் புகழ்பெற்ற அவர் மேலும் பல தொடர்களில் நடித்தார். மலையாள பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கேரக்டர்களில் மிரட்டி வருகிறார். மலையாள சின்னத்திரை இயக்குனர் அலிபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
இவரது தந்தை ரத்னாகர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியில் இருக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடிப்பை கைவிட்டு போலீஸ் வேலையில் சேர இருக்கிறார் அப்சார.
இதுகுறித்து அப்சரா கூறும்போது, “கலைத்துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்துவிட்டது. விரைவில் போலீஸ் துறையில் அலுவலக பணியில் சேர இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி.யில் சேர்ந்து இருந்தேன். அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருந்தது. கலைத்துறையில் கால் வைத்த பின்பு பழைய விருப்பங்களில் ஈடுபாடு குறைந்து விட்டது. ஆனாலும் நான் தற்போது சேர இருக்கும் புதிய பணியிலும் சாதிப்பேன். என்கிறார்.