'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிப்பார். கடந்த ஆண்டு அவர் 'புலிமடா' என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் 'அஜயன்டே ரெண்டாம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்கள் தவிர பசில் ஜோசப், சுரபி லட்சுமி, ரோகினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜித்தின் லால் இயக்குகிறார். மேஜிக் பிரேம் நிறுவனத்தின் சார்பில் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். வருகிற செப்படம்பர் 12ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் 3.20 கோடி கடன் பெற்றிருந்தாகவும் அதனை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டதாகவும், தனது கடனை திருப்பி செலுத்தாதவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.