தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா |
தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிப்பார். கடந்த ஆண்டு அவர் 'புலிமடா' என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் 'அஜயன்டே ரெண்டாம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்கள் தவிர பசில் ஜோசப், சுரபி லட்சுமி, ரோகினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜித்தின் லால் இயக்குகிறார். மேஜிக் பிரேம் நிறுவனத்தின் சார்பில் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். வருகிற செப்படம்பர் 12ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் 3.20 கோடி கடன் பெற்றிருந்தாகவும் அதனை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டதாகவும், தனது கடனை திருப்பி செலுத்தாதவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.