ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிப்பார். கடந்த ஆண்டு அவர் 'புலிமடா' என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் 'அஜயன்டே ரெண்டாம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்கள் தவிர பசில் ஜோசப், சுரபி லட்சுமி, ரோகினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜித்தின் லால் இயக்குகிறார். மேஜிக் பிரேம் நிறுவனத்தின் சார்பில் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். வருகிற செப்படம்பர் 12ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் 3.20 கோடி கடன் பெற்றிருந்தாகவும் அதனை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டதாகவும், தனது கடனை திருப்பி செலுத்தாதவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.