சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பழம்பெரும் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமு காரியத். 'திரமாலா' என்ற படத்தை 1953ம் ஆண்டு விமல்குமார் மற்றும் பி.ஆர்.எஸ்.பிள்ளையுடன் இணைந்து இயக்கினார். 1954ஆம் ஆண்டில் 'நீலக்குயில்' படத்தை பி.பாஸ்கரனுடன் இணைந்து இயக்கி அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தின் முதல் சிறந்த படமாக கருதப்படுகிறது.
நீலக்குயிலுக்குப் பிறகு, மின்னாமினுங்; புத்ரன்; மூடுபடம்; பரதநாட்டியம், ஏழுராத்திரிகள், அபயம், மாயா, நெல்லு, த்வீபு, அம்முவின்றே ஆட்டின்குட்டி, மலங்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே மலையாள சினிமாவின் முக்கியமான படங்களாக இப்போதும் பேசப்படுகிறது.
1985ம் ஆண்டு இவர் இயக்கிய 'செம்மீன்' படம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தமிழில் '16 வயதினிலே' படம் போன்று இப்போதும் செம்மீன்தான் நம்பர் ஒன் படமாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியான மது மற்றும் ஷீலா ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். செம்மீன் மலையாளத் திரையுலகின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. தகழி, சிவசங்கர பிள்ளையின் நாவலின் தழுவலான இப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாளத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டு தமிழில் 'கண்ணம்மா' என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். லட்சுமணன் என்பவர் இயக்கி இருந்தார். பாடல்கள் வெற்றி பெற்றபோதும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.