அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

பழம்பெரும் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமு காரியத். 'திரமாலா' என்ற படத்தை 1953ம் ஆண்டு விமல்குமார் மற்றும் பி.ஆர்.எஸ்.பிள்ளையுடன் இணைந்து இயக்கினார். 1954ஆம் ஆண்டில் 'நீலக்குயில்' படத்தை பி.பாஸ்கரனுடன் இணைந்து இயக்கி அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தின் முதல் சிறந்த படமாக கருதப்படுகிறது.
நீலக்குயிலுக்குப் பிறகு, மின்னாமினுங்; புத்ரன்; மூடுபடம்; பரதநாட்டியம், ஏழுராத்திரிகள், அபயம், மாயா, நெல்லு, த்வீபு, அம்முவின்றே ஆட்டின்குட்டி, மலங்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே மலையாள சினிமாவின் முக்கியமான படங்களாக இப்போதும் பேசப்படுகிறது.
1985ம் ஆண்டு இவர் இயக்கிய 'செம்மீன்' படம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தமிழில் '16 வயதினிலே' படம் போன்று இப்போதும் செம்மீன்தான் நம்பர் ஒன் படமாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியான மது மற்றும் ஷீலா ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். செம்மீன் மலையாளத் திரையுலகின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. தகழி, சிவசங்கர பிள்ளையின் நாவலின் தழுவலான இப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாளத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டு தமிழில் 'கண்ணம்மா' என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். லட்சுமணன் என்பவர் இயக்கி இருந்தார். பாடல்கள் வெற்றி பெற்றபோதும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.




