ஐஸ்வர்ய லட்சுமி வெப் தொடரில் இணைந்த முக்கிய நடிகர்கள் | ஆக., 30ல் வெளியாகும் ‛கோல்டன் ஸ்பரோ' பாடல் | கூலி படத்தில் இணைந்த மற்றொரு கன்னட பிரபலம் | நாளை ஆக. 28ல் வெளியாகும் ‛லப்பர் பந்து' பட டிரைலர் | பிளாஷ்பேக்: புராண படத்தில் ஜோடியாக நடித்த கமல் - ஸ்ரீதேவி | கங்கனாவுக்கு கொலை மிரட்டல் | ரேவதி சம்பத் யார் என்றே தெரியாது: ரியாஸ்கான் மறுப்பு | சிறையில் தர்ஷன் ஜாலி வாழ்க்கை : ஏற்பாடு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட் | பிளாஷ்பேக் : தமிழ்நாட்டுக்குள் சினிமாவை கொண்டு வந்தவர் | அஷ்வதிக்கு அடித்த ஜாக்பாட் : வரிசையாக குவியும் வாய்ப்புகள் |
இந்திய சினிமாவின் ‛இசை ராஜா' இசையமைப்பாளர் இளையராஜா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நாளை(ஜூலை 14) நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரின் பல எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கிறது. இளையராஜா உடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அதோடு நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஹங்கேரி இசை கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைக்க உள்ளனர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து இவ்விழாவினை நடத்துகின்றனர்.
மக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அப்புறம் என்ன சென்னை வாசிகளே... இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையத் தயாரா...!