கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கேரள மாநிலத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் கேரளாவைச் சேர்ந்தவரும், தமிழ் நடிகருமான ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் கூறினார். தனக்கு போன் செய்து “என்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள விரும்பும் உங்கள் தோழிகள் இருந்தால் கூறுங்கள்” என்று ரியாஸ்கான் கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த புகாரை ரியாஸ்கான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை என் மீது யாரும் இப்படியொரு குற்றச்சாட்டை கூறியதில்லை. மனைவி, மகன்கள் என சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்குத் தெரியும்.
என் மீது குற்றம் சொல்லும் ரேவதி சம்பத் யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததுகூட இல்லை. போனில் பேசியதாகத்தான் அவர் கூறியுள்ளார். என் பெயரை பயன்படுத்தி யாராவது பேசி இருக்கலாம். நான்தான் பேசினேன் என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும். இது தொடர்பாக ஹேமா கமிட்டி விசாரித்தால், அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.