Advertisement

சிறப்புச்செய்திகள்

நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறையில் தர்ஷன் ஜாலி வாழ்க்கை : ஏற்பாடு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட்

27 ஆக, 2024 - 02:11 IST
எழுத்தின் அளவு:
Darshan-Jolly-Life-in-Jail-:-Organized-Officials-Suspended

முன்னணி கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள், குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கூலிப்படை வைத்து படுகொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் தா்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறையில் உள்ள தர்ஷனை அவரது குடும்பத்தினர் சந்தித்து வருகிறார்கள். கன்னட நடிகர் சங்கம் அவர் விடுதலை அடைய யாகம் நடத்தியது. தனக்கு வீட்டு சாப்பாடு தர வேண்டும் என்று தர்ஷன் சிறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தநிலையில் சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு ஆதாரமாக சிறையின் திறந்தவெளி மைதானத்தில் தர்ஷன், பிரபல ரவுடியான வில்சன் கார்டன் நாகாவுடன் அமர்ந்து பேசுவதுடன், ஒரு கையில் சிகரெட், மற்றொரு கையில் டீ கப் வைத்திருக்கும் புகைப்படம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று சிறையில் இருந்தபடியே செல்போனில் வெளியில் உள்ள ரவுடியுடன் வீடியோகால் மூலமாக பேசும் காட்சிகளும் வெளியாகின. இது தொடர்பாக மேலும் சில படங்களும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பியின் உத்தரவிரன் பேரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் தர்ஷனின் சொகுசு வாழ்க்கைக்கு உதவிய 7 சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறை விதிகளை மீறியதாக தர்ஷன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் சிறப்பு சலுகை வழங்கிய வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தமிழ்நாட்டுக்குள் சினிமாவை கொண்டு வந்தவர்பிளாஷ்பேக் : தமிழ்நாட்டுக்குள் ... ரேவதி சம்பத் யார் என்றே தெரியாது: ரியாஸ்கான் மறுப்பு ரேவதி சம்பத் யார் என்றே தெரியாது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in