Advertisement

சிறப்புச்செய்திகள்

நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : தமிழ்நாட்டுக்குள் சினிமாவை கொண்டு வந்தவர்

27 ஆக, 2024 - 02:07 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-He-brought-cinema-to-Tamil-Nadu

இன்றைக்கு சினிமா பல கோடிகள் புழங்குகிற பொழுதுபோக்கு துறையாக வளர்ந்திருக்கிறது. 1000 தியேட்டர்கள், ஆண்டுக்கு 250 படங்கள், 1500 கோடி வரவு செலவு என சினிமா உயர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவை முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். தமிழ் சினிமாவின் தந்தை என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறவர்.

கோயம்புத்தூரை சேர்ந்த சாமிக்கண்ணு திருச்சி ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். அப்போது 1905ம் ஆண்டு ரயில்வே துறைக்கு பிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்ற அதிகாரி வந்தார். அப்போது அவர் தனது வீட்டில் சினிமா பார்ப்பதற்காக ஒரு புரொஜெக்டர் கொண்டு வந்தார். வந்த சில நாட்களிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே நாடு திரும்ப விரும்பினார். அப்போது அவரிடம் இருந்த புரொஜக்டரை 2 ஆயிரத்து 250 ரூபாய்கு வாங்கினார். அது அப்போது மிகப்பெரிய தொகை.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு கருவி. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியாது அதற்கு இவ்வளவு பெரிய பணமாக என்று உறவினர்கள் அவரை எச்சரித்தார்கள். ஆனால் டுபாண்ட் அந்த கருவி மூலம் 'லைப் ஆப் ஜீசஸ்' என்ற மவுன படத்தை திரையிட்டதை பார்த்த பிறகு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் உறவினர்களிடம் இந்த கருவி எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக அமையும் என்று உறவினர்களை சமாதானப்படுத்தி பணம் திரட்டி அதனை வாங்கினார்.

புரொஜக்டரை கொடுத்து சென்ற டுபாண்ட் மூலம் பிரான்சிலிருந்து சில மவுன பட ரீல்களை வாங்கினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாத்தில் அதனை திரையிடுகிறார். சலனப்படத்தை பார்த்து மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். இவர் ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார் என்று அப்பாவி மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.

புரொஜெக்டரையும், பிலிம் ரோல்களையும் தூக்கி சுமந்து தமிழ்நாடு முழுக்க பயணித்து மக்களுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தினார். அது பல்கி பெருகி பின்னாளில் தியேட்டர் கட்டினார், படங்கள் தயாரித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சூரி : இன்று வெற்றிகரமான ஹீரோஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன ... சிறையில் தர்ஷன் ஜாலி வாழ்க்கை : ஏற்பாடு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட் சிறையில் தர்ஷன் ஜாலி வாழ்க்கை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in