என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்தது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டின் முக்கிய குடும்பமான அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். நடிகர் அமிதாப் அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, மகள் வழி பேரன் அகஸ்திய நந்தா, பேத்தி நவ்யா நவேலி ஆகியோருடன் ஒன்றாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் அங்கிருந்து அரங்கிற்குள் நுழைந்த சிறிது நேரம் கழித்து அமிதாப்பின் மருமகளும், மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவர் மட்டும் தனியாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தற்போது அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு பற்றிய சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான சர்ச்சை இதற்கு முன்பு வந்து பின்னர் அடங்கியது. இப்போது மீண்டும் எழுந்துள்ளது.