கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்தது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டின் முக்கிய குடும்பமான அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். நடிகர் அமிதாப் அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, மகள் வழி பேரன் அகஸ்திய நந்தா, பேத்தி நவ்யா நவேலி ஆகியோருடன் ஒன்றாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் அங்கிருந்து அரங்கிற்குள் நுழைந்த சிறிது நேரம் கழித்து அமிதாப்பின் மருமகளும், மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவர் மட்டும் தனியாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தற்போது அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு பற்றிய சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான சர்ச்சை இதற்கு முன்பு வந்து பின்னர் அடங்கியது. இப்போது மீண்டும் எழுந்துள்ளது.