பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்தது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டின் முக்கிய குடும்பமான அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். நடிகர் அமிதாப் அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, மகள் வழி பேரன் அகஸ்திய நந்தா, பேத்தி நவ்யா நவேலி ஆகியோருடன் ஒன்றாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் அங்கிருந்து அரங்கிற்குள் நுழைந்த சிறிது நேரம் கழித்து அமிதாப்பின் மருமகளும், மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவர் மட்டும் தனியாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தற்போது அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு பற்றிய சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான சர்ச்சை இதற்கு முன்பு வந்து பின்னர் அடங்கியது. இப்போது மீண்டும் எழுந்துள்ளது.