‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
இந்திய சினிமாவின் ‛இசை ராஜா' இசையமைப்பாளர் இளையராஜா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நாளை(ஜூலை 14) நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரின் பல எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கிறது. இளையராஜா உடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அதோடு நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஹங்கேரி இசை கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைக்க உள்ளனர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து இவ்விழாவினை நடத்துகின்றனர்.
மக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அப்புறம் என்ன சென்னை வாசிகளே... இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையத் தயாரா...!