நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்திருந்தார். அதேப்போன்று இந்த படத்தில் கன்னட சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான உபேந்தரா இணைந்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது கன்னட நடிகை ரச்சிதா ராம் என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.