நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

இசையமைப்பாளர் இளையராஜா படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து பல்வேறு ஊர்களில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். அந்தவகையில் வரும் ஜூலை 14ம் தேதி சென்னை, ஒய்எம்சிஏ மைதானத்தில் "Truly live in concert" என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛பேரன்பு கொண்ட ரசிக பெருமக்களே, வருகிற ஜூலை 14ம் தேதி சென்னையில் எனது இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்த இசை நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தலை சிறந்த இசைக் கலைஞர்களும் எனது குழுவோடு இணைந்து நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை 14ம் தேதி மறந்து விடாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.