'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நகைச்சுவை நடிகர் இன்னசன்ட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவி வகித்து வருகிறார். நீண்ட நாட்களாக இந்த சங்கத்தில் துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த நடிகர் இடவேள பாபு சமீபத்தில் இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தான் ஓய்வு பெறுவதாக கூறினார்.
இந்த நிலையில் அடுத்த தலைவராக சமீபத்தில் மீண்டும் நடிகர் மோகன்லாலும், பொருளாளராக முதன்முறையாக நடிகர் உன்னி முகுந்தனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பொதுக்குழுவிற்கான 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கமிட்டி உறுப்பினர்களாக இருந்த நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோருக்கு ஓட்டுக்கள் குறைவாக விழுந்தன. அதே சமயம் 11 பேரில் 4 பேர் பெண்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் இருக்கிறது.
வேறு பெண்கள் யாரும் இந்த கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 11 பேரில் 10 பேர் மட்டுமே தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் 11வது நபரை தேர்வு செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை அன்சிபா ஹாசன், திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.