Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அமராவதிக்கு மாறுமா டோலிவுட்?

19 ஜூன், 2024 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Will-Tollywood-shift-to-Amaravati

இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தித் திரையுலகத்திற்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டும் திரையுலகம் தெலுங்குத் திரையுலகம். 90கள் வரையிலும் சென்னையில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. அதுவரையில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் சென்னையில் உள்ள அவர்களது வீட்டில்தான் வசித்து வந்தனர். மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் என பலரும் இங்குதான் படித்து வளர்ந்தனர்.

என்.டி.ராமராவ் ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்ற உடன் தெலுங்குத் திரையுலகத்தை ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கேயே படப்பிடிப்பு நடக்கும் தெலுங்குப் படங்களுக்கு பல சலுகைகளை வழங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமும் ஐதராபாத் சென்றுவிட்டது. ஒரு சிலர் மட்டுமே இன்னமும் இங்கேயே உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை ஆந்திரா, தெலங்கானா என பிரித்தனர். இருந்தாலும் ஐதராபாத்தை விட்டு தெலுங்குத் திரையுலகினர் வேறு எங்கும் நகரவில்லை. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமராவதி நகரை ஆந்திராவின் தலைநகராக உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளார்கள். அதனால், அமராவதி அதன் அருகில் உள்ள விஜயவாடா ஆகியவற்றை தெலுங்குப் படங்களுக்கான படப்பிடிப்பு இடங்களான மாற்றும் வேலைகளும் நடக்கும் எனத் தெரிகிறது.

தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பவன் கல்யாண் இன்னும் மூன்று படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. “ஓஜி, உஸ்தாத் பகத் சிங், ஹரிஹர வீர மல்லு” ஆகிய படங்களின் படப்பிடிப்பை அவர் இன்னும் முடிக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகே அப்படங்களின் படப்பிடிப்புகளில் அவர் மீண்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

அதற்குப் பிறகும் அந்தப் படங்களின் படப்பிடிப்பை அமராவதி அல்லது விஜயவாடா ஆகிய இடங்களில் அரங்கம் நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்த கேட்டுக் கொள்வார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆந்திராவிலும் திரைப்படத் தொழில் வளர அவர் முயற்சிப்பார் என்கிறார்கள். அங்கும் படப்பிடிப்பு நடத்தினால் சலுகைகள் வழங்கும் முடிவை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள் : பார்வதிக்கு இயக்குநர்கள் வேண்டுகோள்அந்த வார்த்தையை மட்டும் ... ஆப்பிரிக்கன் நாவல்களை வாங்கிய ராஜமவுலி : மகேஷ்பாபு படத்திற்காகவா? ஆப்பிரிக்கன் நாவல்களை வாங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in