சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்கு சினிமாவில் சீனியர் இயக்குனர்களில் ஒருவரான கே.வாசு உடல்நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 1978ல் முதன் முறையாக இயக்குனராக பிரணம் கரிது என்கிற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்த கே.வாசு அந்த படத்தில் தான் முதன்முதலாக நடிகர் சிரஞ்சீவியையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவியின் திறமையை வெளிக்கொண்டு வந்த அந்த படம், இயக்குனராக கே.வாசுவுக்கும் புதிய பாதை போட்டு தந்தது. அது மட்டுமல்ல, இவர் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர் பிரத்தியகர்மாவின் மகனும் இயக்குனர் ஹேமம்பாரதர ராவின் சகோதரரும் ஆவார்.
கடந்த சில நாட்களாகவே சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று காலமானார். தெலுங்கு திரை உலகத்தை சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மறைவுக்கு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி. இதில் அவர் கூறும்போது, “மூத்த இயக்குனர் கே.வாசு. அவர் இப்போது இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. என் திரையுலக பயணத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்த பிராணம் கரிது, தொடடோங்காலு, அல்லுல்லு அண்ணுரு, கொத்தலா ராயுடு ஆகிய படங்களை இயக்கியவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.