விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருந்தார் இயக்குனர் நிசாம் பஷீர். இந்த படத்தை தொடர்ந்து அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிசாம் பஷீர். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன சுராஜ் வெஞ்சார மூடு நடிக்க உள்ளார். ரோசாக் படத்திற்கு கதை எழுதிய சமீர் அப்துல் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த புதிய படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.