'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் அந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் நாட்டுப்புறப்பாடகி நஞ்சியம்மா என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் பாடிய களக்காத்தா என்கிற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
அதேபோல பீம்லா நாயக் படத்திலும் நாட்டுப்புறப் பாடகரான தெலுங்கானாவைச் சேர்ந்த தர்ஷனம் மொகிலையா என்கிற நாட்டுப்புறப் பாடகரை அழைத்து வந்து பாட வைத்தார்கள். அந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பயனாக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. கின்னரா என்கிற நாட்டுப்புற வாத்தியத்தை வைத்து இசைப்பதில் இவர் வித்தகர். இந்த நிலையில் 73 வயதான மொகிலையா நேற்று உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் அது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மருத்துவ சிகிச்சைக்கு பீம்லா நாயக் பட இயக்குனர் வேணு மற்றும் அவரது குழுவினரும் மாநில அரசாங்கமும் பல உதவிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மொகிலையாவின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.




