இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த புஷ்பா இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது என அறிவித்திருந்த நிலையில் இன்னும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறாததால் தற்போது இப்படம் டிசம்பர் 6ந் தேதி அன்று தான் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர். கடந்தவாரம் முதலே புஷ்பா 2 தள்ளிப்போவதாக செய்திகள் பரவின. இப்போது அது உண்மையாகி உள்ளது. புஷ்பா 2 படம் தள்ளிப்போவதால் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வர வாய்ப்புள்ளது.