விஜபி-2 படத்தில் செலக்ட் ஆனேன் ஆனால்... வசந்த் வசியின் சோகக்கதை | நடனப்பள்ளி திறந்த ஹரிப்பிரியா | காலில் விழுந்த தந்தை : உணர்ச்சிமயமான சரிகமப நிகழ்ச்சி மேடை | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரியில் சாதித்த டி.ஆர்.மகாலிங்கம் | ஆஸ்கர் அகாடமியில் இந்தியர்களின் ஆதிக்கம் | பொய்யான வசூல் நிலவரம் வெளியிட்டால் நடவடிக்கை : மலையாள தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | நாயகன் ஆன கேட்க, பேச முடியாத இளைஞர் | பள்ளி பாடத்தில் தமன்னா வரலாறு இடம் பெற்றதால் சர்ச்சை | ரஜினிக்கு லுக் டெஸ்ட் ; ஜூலையில் கூலி படப்பிடிப்பு : லோகேஷ் அப்டேட் | ரேஸ் காரில் 222 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த அஜித் |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை அஞ்சலி அவருடைய 39வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். தனது பிறந்தநாளை இங்கு கொண்டாடாமல் தாய்லாந்து நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவான கோ சமுய் என்ற இடத்திற்கு அவர் சுற்றுலா சென்று அங்குதான் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணம் முடிந்தது. ஈடு இல்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. புதிய சாகசங்கள், வயது குறைந்த மற்றும் நாம் அழும் வரை அதிக சிரிப்பு நிறைந்த ஒரு வருடம் இதோ. அதை மறக்க முடியாததாக மாற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் “ஏழு கடல் ஏழு மலை” படத்திலும், தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் அந்தப் படங்கள் வெளியாக உள்ளன.