காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை அஞ்சலி அவருடைய 39வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். தனது பிறந்தநாளை இங்கு கொண்டாடாமல் தாய்லாந்து நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவான கோ சமுய் என்ற இடத்திற்கு அவர் சுற்றுலா சென்று அங்குதான் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணம் முடிந்தது. ஈடு இல்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. புதிய சாகசங்கள், வயது குறைந்த மற்றும் நாம் அழும் வரை அதிக சிரிப்பு நிறைந்த ஒரு வருடம் இதோ. அதை மறக்க முடியாததாக மாற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் “ஏழு கடல் ஏழு மலை” படத்திலும், தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் அந்தப் படங்கள் வெளியாக உள்ளன.