துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

சாந்தனு பாக்யராஜ் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திய 'ராவண கோட்டம்' படம் அதை பூர்த்தி செய்யவில்லை. அடுத்து அவர் நடித்த 'ப்ளூ ஸ்டார்' படம் ஓரளவுக்கு அவரை தாக்கு பிடிக்க வைத்தது. இந்த நிலையில் அவர் புதிதாக நடிக்கும் படம் 'மெஜந்தா'. இதில் அவரது ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரிக்கிறார்கள். பரத் மோகன் இயக்குகிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் பரத் மோகன் கூறியதாவது: காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் இருக்கும். அழகான சினிமாட்டிக் பீல்-குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும். அவள் சூரிய உதயம், என்றால் அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது' என்ற தீம்தான் இந்தப் படம். என்றார்.