ரஜினி, கமல் இணையும் படம் : இன்று பிரமோ படப்பிடிப்பு | 2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் |

சாந்தனு பாக்யராஜ் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திய 'ராவண கோட்டம்' படம் அதை பூர்த்தி செய்யவில்லை. அடுத்து அவர் நடித்த 'ப்ளூ ஸ்டார்' படம் ஓரளவுக்கு அவரை தாக்கு பிடிக்க வைத்தது. இந்த நிலையில் அவர் புதிதாக நடிக்கும் படம் 'மெஜந்தா'. இதில் அவரது ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரிக்கிறார்கள். பரத் மோகன் இயக்குகிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் பரத் மோகன் கூறியதாவது: காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் இருக்கும். அழகான சினிமாட்டிக் பீல்-குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும். அவள் சூரிய உதயம், என்றால் அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது' என்ற தீம்தான் இந்தப் படம். என்றார்.




