சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி நாயகன் பாலகிருஷ்ணா. மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான என்டிஆர் மகன். அவரது அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்கு தேசக் கட்சியில் இருக்கிறார்.
தற்போது நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் சுமார் 32 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.
தெலுங்கு தேசக் கட்சி சார்பா 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2019ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1985 முதல் 1994 வரையில் அவரது அப்பா என்டிஆர் அதே தொகுதியில் நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். தனது அப்பாவின் சாதனையைத் தற்போது சமன் செய்துள்ளார் பாலகிருஷ்ணா. 1996ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பாலகிருஷ்ணாவின் சகோதரர் ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றிருந்தார்.
1985ம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.