‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி நாயகன் பாலகிருஷ்ணா. மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான என்டிஆர் மகன். அவரது அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்கு தேசக் கட்சியில் இருக்கிறார்.
தற்போது நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் சுமார் 32 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.
தெலுங்கு தேசக் கட்சி சார்பா 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2019ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1985 முதல் 1994 வரையில் அவரது அப்பா என்டிஆர் அதே தொகுதியில் நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். தனது அப்பாவின் சாதனையைத் தற்போது சமன் செய்துள்ளார் பாலகிருஷ்ணா. 1996ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பாலகிருஷ்ணாவின் சகோதரர் ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றிருந்தார்.
1985ம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.