சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வந்த வேட்டையன் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணமாக அபுதாபி சென்று இருந்த அவர் அங்கே தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். மீண்டும் சென்னை விரும்பிய அவர் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களை தரிசிப்பதற்காக வழக்கம் போல ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை உத்தரகண்ட் போலீசார் வரவேற்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உத்தரகண்ட் போலீஸார், “இந்த தேவ பூமியான பத்ரிநாத்தை தரிசிக்க இங்கே வந்திருக்கும் பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தரிசனத்தை முடித்த பிறகு அவர் (ரஜினிகாந்த்) தரிசனம் சிறப்பாக இருந்தது என்றும் மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.