சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வந்த வேட்டையன் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணமாக அபுதாபி சென்று இருந்த அவர் அங்கே தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். மீண்டும் சென்னை விரும்பிய அவர் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களை தரிசிப்பதற்காக வழக்கம் போல ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை உத்தரகண்ட் போலீசார் வரவேற்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உத்தரகண்ட் போலீஸார், “இந்த தேவ பூமியான பத்ரிநாத்தை தரிசிக்க இங்கே வந்திருக்கும் பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தரிசனத்தை முடித்த பிறகு அவர் (ரஜினிகாந்த்) தரிசனம் சிறப்பாக இருந்தது என்றும் மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.