சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும் ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், டமாக்கா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது படங்களில் தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்து இயக்குநர் ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இயக்குனர் ஒமர் லுலு மீது கொச்சி நெடும்பசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த ஒமர் லுலு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை பரிசளித்த நீதிமன்றம் ஒமர் லுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதுடன் வரும் ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.




