தமிழ் சினிமா இசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா | தென்னிந்தியர்கள் பற்றி இட்லி, தோசை, சாம்பார் கமென்ட் : ஸ்ருதிஹாசன் கோபம் | நான் சாதி வெறியன்தான் : நடிகர் ரஞ்சித் ஆவேசம் | இறந்த பின்னரும் மகனுக்கு கை கொடுக்கும் விஜயகாந்த் | விஜய் - பவதாரிணி குரலில் வெளியான “சின்ன சின்ன கண்கள்...” | அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி | அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல் | ஜூலை 14ல் சென்னையில் இசை நிகழ்ச்சி : இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | சந்தானத்திற்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி | தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு |
மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும் ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், டமாக்கா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது படங்களில் தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்து இயக்குநர் ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இயக்குனர் ஒமர் லுலு மீது கொச்சி நெடும்பசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த ஒமர் லுலு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை பரிசளித்த நீதிமன்றம் ஒமர் லுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதுடன் வரும் ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.