நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் அந்த படங்களின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல், பார்முலா கார் பந்தயத்திலும் பங்கேற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில் பாட்மின்டன் போட்டியிலும் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். இப்படி பல்வேறு திறமைகளை பெற்றவர் நிவேதா பெத்துராஜ்.
தற்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிவேதா பெத்துராஜின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் கார் டிக்கியை திறக்கச் சொல்லி கேட்கிறார்கள். "சாலையில் செல்கிறேன். பேப்பர்கள் எல்லாம் சரியா இருக்கு” என்று நிவேதா பெத்துராஜ் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.
'எங்களின் கடமை' எனக்கூறி, கார் டிக்கியை திறக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் சொல்வதைக் கேட்காமல், 'அதில் எதுவும் இல்லை, திறக்க முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சார். இது மரியாதைக்குரிய விஷயம்' என்று நிவேதா கூறுகிறார். சாலையில் போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது உண்மையில் நடைபெற்றதா அல்லது ஏதேனும் படத்தின் புரமோஷனா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.