22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் சில மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வரும் கேலக்ஸி அப்பார்ட்மெண்ட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் சில நாட்களுக்கு முன் ஜிதேந்திர குமார் சிங் என்கிற 23 வயதான நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அந்த அப்பார்ட்மெண்ட் வெளியே நின்று நோட்டமிட்டுள்ளார். போலீசார் அவரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார்கள். ஆனாலும் அவர் அன்று மாலையே அந்த அபார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒருவருக்கு சொந்தமான காரில் மீண்டும் உள்ளே நுழையும் முயன்ற போது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். சல்மான் கானை தான் பார்க்க விரும்பியதால் இப்படி வந்தேன் என்று அவர் கூறினாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நடந்த இரண்டு நாட்களே ஆனா நிலையில் நேற்று 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அபார்ட்மெண்ட்டிற்குள் உள்ளே நுழைந்து சல்மான் கான் வசிக்கும் பிளாட்டிற்கு செல்லும் லிப்டிலும் ஏறி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கே செல்ல முயற்சித்து இருக்கிறார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் அந்த பெண், “சல்மான் கானை ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ட்டியில் நான் சந்தித்தேன். அவரது அழைப்பின் பேரில் தான் அவரை நான் பார்க்க வந்தேன்” என்று கூறினாலும் கூட சல்மான்கான் வீட்டினர் அப்படி யாருக்கும் நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த தகவலை மறுத்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து சில நபர்கள் சல்மான் கானை பார்ப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைவதை பார்த்து சல்மான் கானின் பாதுகாப்பை போலீசார் இன்னும் பலப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.