நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் கமல்ஹாசன், 'தக்லைப்' பட விழாவில் கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிப்போம் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில், ''தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லி அங்குள்ள கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் பெங்களூரு ஆர்.டி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். என்றாலும் அந்த புகார் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையம் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.