ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த 'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். அவருடன் திரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி நடராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சூர்யா- 45வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையப் போகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும். முக்கியமாக இது செலிப்ரேஷன் படம் என்பதால் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் டைட்டில் குறித்து தகவல் விரைவில் வெளியாகும்' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.