சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இதன் முன்தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்தமான் தீவில் தொடங்குகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நாசர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.