டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இதன் முன்தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்தமான் தீவில் தொடங்குகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நாசர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.