அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |

அன்னபூரணி படத்தையடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடாவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தன்னைவிட வயது குறைவான ஒரு இளைஞனை ஒரு பெண் காதலிப்பதும், இந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களுக்கிடையே திருமணத்திற்கு பிறகு நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதன் காரணமாகவே தற்போது 39 வயதாகும் நயன்தாராவையும், 33 வயதாகும் கவினையும் இப்படத்தில் ஜோடி சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.




