பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

அன்னபூரணி படத்தையடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடாவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தன்னைவிட வயது குறைவான ஒரு இளைஞனை ஒரு பெண் காதலிப்பதும், இந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களுக்கிடையே திருமணத்திற்கு பிறகு நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதன் காரணமாகவே தற்போது 39 வயதாகும் நயன்தாராவையும், 33 வயதாகும் கவினையும் இப்படத்தில் ஜோடி சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.