தமிழ் சினிமா இசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா | தென்னிந்தியர்கள் பற்றி இட்லி, தோசை, சாம்பார் கமென்ட் : ஸ்ருதிஹாசன் கோபம் | நான் சாதி வெறியன்தான் : நடிகர் ரஞ்சித் ஆவேசம் | இறந்த பின்னரும் மகனுக்கு கை கொடுக்கும் விஜயகாந்த் | விஜய் - பவதாரிணி குரலில் வெளியான “சின்ன சின்ன கண்கள்...” | அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி | அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல் | ஜூலை 14ல் சென்னையில் இசை நிகழ்ச்சி : இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | சந்தானத்திற்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி | தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஹிந்திக்குச் செல்வதற்கு வரை சென்னையில்தான் வசித்து வந்தார். ஹிந்தியில் பிரபலமான பின் அங்கேயே தங்கிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரையும் மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி, மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி கோயிலுக்குச் செல்வது வழக்கம். இன்று சென்னை, தி நகரில் உள்ள பிரபலமான முப்பாத்தமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அவரது சித்தியும், முன்னாள் நடிகையுமான மகேஷ்வரியுடன் சென்றுள்ளார். இருவரும் கோயில் வாசல் முன்பு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஜான்வி, “சென்னையில் எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான முப்பாத்தம்மன் கோயிலுக்கு முதல் முறையாகச் சென்றேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு சென்னையில் பிடித்த இடங்களை தனது மகள்களுக்கும் தெரிவித்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
சென்னையின் தற்போதைய மையப்பகுதியாக இருக்கும் தியாகராய நகர் ஒரு காலத்தில் விவசாயம் செய்யும் இடமாக இருந்தது. அப்போது வயல்களுக்கு மத்தியில் இருந்த அரச மரம், வேம்பு மரம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு புற்று உருவாகியுள்ளது. அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் விக்கிரகத்தை வைத்து நாளடைவில் கோயிலை கட்டியுள்ளார்கள். முப்போகமும் விளையும் இடத்தில் அம்மன் கிடைத்ததால் முப்பாத்தம்மன் என பெயர் வைத்துள்ளார்கள். 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயம் இது.