விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.