20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.