இது இரண்டாவது சுதந்திர போர் : ரசிகர்களின் கவனம் பெறும் ‛இந்தியன் 2' டிரைலர் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர் | ஆங்கிலத்தில் டப் ஆகும் மாநாடு | கார்த்தி படத்தில் ஆஷிகா ரங்கநாத் | காதல் எமோஜிகளை பதிவு செய்த நிவேதா தாமஸ் | தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்கு செல்லும் ஏழு கடல் ஏழு மலை படம் | 10 நாட்களில் ரூ. 81 கோடி வசூலை எட்டிய மகாராஜா | பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவை சந்தித்த நயன்தாரா | கங்கனாவின் எமர்ஜென்சி செப்., 6ல் ரிலீஸ் | நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா? - கமல் கேள்வி |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.