அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்! | 'குட் பேட் அக்லி'யில் வில்லனாக நடிக்கிறாரா எஸ்.ஜே.சூர்யா? | ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமண சங்கீத் விழா: கவர்ச்சி நடனமாடிய அட்லி - பிரியா அட்லி! | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மாஸ்டர் மகேந்திரன்! | வெள்ளை ரோஜா, வின்னர், திருச்சிற்றம்பலம் - ஞாயிறு திரைப்படங்கள் | மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் கருத்து | மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றும் ரகுமானின் மகள் | பைக் பயணங்களை விடாமல் தொடரும் மஞ்சு வாரியர் | பிறந்தநாள் வாழ்த்துடன் காதலியை அறிமுகப்படுத்திய சுரேஷ்கோபியின் இளைய மகன் | காளிதாஸ் இரண்டாம் பாகம் துவங்குகிறது |
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா அருகே சர்வதேச தரத்தில் 1000 ஏக்கரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகின. அந்த நகரை நிர்மாணிப்பதற்கான கடைசி கட்ட போட்டியில் நால்வர் இருந்தனர்..
பிரபல ஆடியோ கம்பெனி நிறுவனமான டி சீரிஸ், அக்ஷய்குமார் பங்குதாரராக இருக்கும் சூப்பர்சானிக் டெக்னோபில்ட் என்ற நிறுவனம், போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பேவியூ புராஜக்ட்ஸ், பிரபல தயாரிப்பாளர் கேசி பொக்காடிய பங்குதாரராக இருக்கும் 4 லயன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை அந்த போட்டியில் இருந்தன. அந்நிறுவனங்கள் அவர்களது திட்டங்களைப் பற்றி உ.பி அரசு அதிகாரிகளிடம் விளக்கியுள்ளது. டெண்டரில் போனி கபூர் சார்ந்த நிறுவனம் வெற்றி பெற்றது.
இந்த பிலிம் சிட்டி யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே செக்டர் 21 மற்றும் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைய உள்ளது. திரைப்படப் பல்கலைக் கழகம், சினிமா மியூசியம், ஹெலிபேட் உள்ளிட்ட பல வசதிகள் அங்கு வர உள்ளது. பிபிபி மாடலில் உருவாக உள்ள இந்தத் திரைப்பட நகரத்தை அமைக்க போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பே வியு புராஜக்ட் நிறுவனம் அதிக வருவாய் பங்குத் தொகையைக் காட்டியதால் டெண்டரைக் கைப்பற்றியுள்ளது.