ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா அருகே சர்வதேச தரத்தில் 1000 ஏக்கரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகின. அந்த நகரை நிர்மாணிப்பதற்கான கடைசி கட்ட போட்டியில் நால்வர் இருந்தனர்..
பிரபல ஆடியோ கம்பெனி நிறுவனமான டி சீரிஸ், அக்ஷய்குமார் பங்குதாரராக இருக்கும் சூப்பர்சானிக் டெக்னோபில்ட் என்ற நிறுவனம், போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பேவியூ புராஜக்ட்ஸ், பிரபல தயாரிப்பாளர் கேசி பொக்காடிய பங்குதாரராக இருக்கும் 4 லயன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை அந்த போட்டியில் இருந்தன. அந்நிறுவனங்கள் அவர்களது திட்டங்களைப் பற்றி உ.பி அரசு அதிகாரிகளிடம் விளக்கியுள்ளது. டெண்டரில் போனி கபூர் சார்ந்த நிறுவனம் வெற்றி பெற்றது.
இந்த பிலிம் சிட்டி யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே செக்டர் 21 மற்றும் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைய உள்ளது. திரைப்படப் பல்கலைக் கழகம், சினிமா மியூசியம், ஹெலிபேட் உள்ளிட்ட பல வசதிகள் அங்கு வர உள்ளது. பிபிபி மாடலில் உருவாக உள்ள இந்தத் திரைப்பட நகரத்தை அமைக்க போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பே வியு புராஜக்ட் நிறுவனம் அதிக வருவாய் பங்குத் தொகையைக் காட்டியதால் டெண்டரைக் கைப்பற்றியுள்ளது.