என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

'ஹனு மான்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா. இந்த ஆண்டு தெலுங்கில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம்.
பிரசாந்த் வர்மா அடுத்ததாக இப்படத்தின் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' படத்தை இயக்க உள்ளார். இதற்கடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்தப் படம் டிராப் ஆகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் பிரசாந்த் வர்மா தரப்பில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். படத்திற்கான கதை முழுமையாகத் தயாராக உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.