விஜய் பிறந்த நாளில் ‛தி கோட்' பர்த்டே ஸ்பெஷல்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு | பால சரவணன் ஹீரோவாக நடிக்கும் ‛பேச்சி'- பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! | "எதிர்நீச்சல் தொடரில் நடித்திருக்கக் கூடாது! அவமானம்" : வேல ராமமூர்த்தி | அக்ஷிதா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்! அட்வைஸ் செய்யும் ரசிகர்கள் | சம்பள விஷயத்தில் மோதிக்கொள்ளும் முன்னணி நடிகைகள் | தந்தையிடம் ஆலோசிக்கும் அரசியல் நடிகர் | வாழைப்பழம் முதல் சொப்பன சுந்தரி வரை...: 35 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‛கரகாட்டக்காரன்' | அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்! | சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த விக்ராந்த்! | டபுள் ஐ ஸ்மார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
தமிழில் 'ஜெமினி' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். குறிப்பாக அவரது படு கவர்ச்சி படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பார்க்க தனியாக கட்டணம் வசூலித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பினார். அங்கு ரெட் கார்பெட்டில் கவர்ச்சியாக நடந்து சென்று உலகின் கவனத்தை திருப்ப நினைத்தார். ஆனால் அவரது ஆசையில விசா ஏஜெண்ட் மண்ணை போட்டுவிட்டான்.
இதுகுறித்து கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது: நான் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஒரு மையத்தில் ஏப்ரல் 19ம்தேதி விசாவுக்கு மனு செய்தேன். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பாஸ்போர்ட்டையும் கூரியரில் திருப்பி அனுப்பி வைக்கவில்லை. பாஸ்போர்ட் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊழியர்கள் சொல்கிறார்கள். ஒரு மாதமாகியும் எனக்கு விசா கிடைக்கவில்லை.
நான் கடந்த 13ம்தேதி கிளம்பி இருக்க வேண்டும். ஏற்கனவே விமான டிக்கெட், ஓட்டல் அறையை புக் செய்துவிட்டேன். ஒரு மாதமாகியும் எனக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை. விசா கிடைக்காததால் எனக்கு 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்