இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழில் 'ஜெமினி' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். குறிப்பாக அவரது படு கவர்ச்சி படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பார்க்க தனியாக கட்டணம் வசூலித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பினார். அங்கு ரெட் கார்பெட்டில் கவர்ச்சியாக நடந்து சென்று உலகின் கவனத்தை திருப்ப நினைத்தார். ஆனால் அவரது ஆசையில விசா ஏஜெண்ட் மண்ணை போட்டுவிட்டான்.
இதுகுறித்து கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது: நான் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஒரு மையத்தில் ஏப்ரல் 19ம்தேதி விசாவுக்கு மனு செய்தேன். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பாஸ்போர்ட்டையும் கூரியரில் திருப்பி அனுப்பி வைக்கவில்லை. பாஸ்போர்ட் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊழியர்கள் சொல்கிறார்கள். ஒரு மாதமாகியும் எனக்கு விசா கிடைக்கவில்லை.
நான் கடந்த 13ம்தேதி கிளம்பி இருக்க வேண்டும். ஏற்கனவே விமான டிக்கெட், ஓட்டல் அறையை புக் செய்துவிட்டேன். ஒரு மாதமாகியும் எனக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை. விசா கிடைக்காததால் எனக்கு 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்