‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
'வாமணன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அக்மார்க் தமிழ் பொண்ணு. அதன்பிறகு 180, இங்கிலீஸ் விங்கிலீஸ், வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன், எல்கேஜி, ஆதித்யா வர்மா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக 'லியோ' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். பிரியா நடித்து முடித்துள்ள 'அந்தகன்' மற்றும் 'சுமோ' படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னட பட வாய்ப்புகளும் இல்லை. நடித்து முடித்த படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரியா ஆனந்த், தற்போது புதிதாக வாய்ப்பு தேட தொடங்கி உள்ளார். இதற்காக தனியாக புதிய மேனஜரை நியமித்துள்ள பிரியா புதிய போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.