கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
'வாமணன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அக்மார்க் தமிழ் பொண்ணு. அதன்பிறகு 180, இங்கிலீஸ் விங்கிலீஸ், வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன், எல்கேஜி, ஆதித்யா வர்மா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக 'லியோ' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். பிரியா நடித்து முடித்துள்ள 'அந்தகன்' மற்றும் 'சுமோ' படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னட பட வாய்ப்புகளும் இல்லை. நடித்து முடித்த படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரியா ஆனந்த், தற்போது புதிதாக வாய்ப்பு தேட தொடங்கி உள்ளார். இதற்காக தனியாக புதிய மேனஜரை நியமித்துள்ள பிரியா புதிய போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.