பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை |
மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகர்களின் பெயர்கள் வெளியான போதும், அப்போதெல்லாம் பிரியா ஆனந்தின் பெயர் வெளியாகவில்லை. ஆனால் இப்போது அவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரும் விஜய் 67 வது படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். தற்போது தமிழில் அந்தகன், சுமோ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த் .