ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்க இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பவன் கல்யாணின் தீவிரமான ரசிகை ஒருவர், தெறி ரீமேக்கை இயக்கவிருக்கும் ஹரிஷ் சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தெறி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது . அப்படி நடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒரு மிரட்டல் செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, பவன் கல்யாண் ரீமேக் அல்லாமல் நேரடி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதையடுத்து பவன் கல்யாண் ரசிகர்கள் #WeDontWantTheriRemake என்ற ஒரு ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இப்படி தனது பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் இருந்து தெறி ரீமேக்கில் தான் நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்திருப்பதால், இந்த படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என பவன் கல்யாண் ஆலோசித்து வருவதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.