அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛ரத்னம்'. ஏப்., 26ல் திரைக்கு வருகிறது. விஷால் அளித்த பேட்டி : ‛‛இயக்குனர் ஹரியிடம் நான் தான் போய் வாய்ப்பு கேட்டேன். இந்த கதை பிடித்ததால் நடித்தேன். படத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேனோ அதேமாதிரி 15 கிலோ எடையை குறைத்து ஹரி முன்னாடி வந்து நின்றேன்.
துப்பறிவாளன் 2வில் நடித்துக் கொண்டே இயக்க போகிறேன். நான் இவ்வளவு சீக்கிரம் இயக்குனர் ஆனதற்கு இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி சொல்கிறேன். சினிமா எல்லோருக்கும் பொதுவானது. நான் அனைவருக்காகவும் பேசுகிறேன். சரியான திட்டமிடல் இல்லைன்னா படம் தயாரிக்க வராதீங்க. படம் துவங்கும்போது நல்லநாள் பார்த்து பூஜை போட்டு துவங்குறீங்க... படம் வெளியிடும்போது மாட்டிக் கொள்றீங்க. சரியான திட்டமிடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
யாராவது பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் அடிச்சுடுவேன். சென்னை, அம்பத்தூர் பக்கம் போய் சாலையை எல்லாம் போய் பாருங்க. எவ்வளவு மோசமாக உள்ளது என்று. இங்கு அரசியல் கட்சிக்காரங்க சரியா வேலை பார்க்கல. அவர்கள் பார்க்கவில்லை என்றால் நடிகர்கள் இறங்கி வேலை பார்ப்போம். ரீ-ரிலீஸ் படங்கள் வரவேற்பு என்பது பாசிங் டிரெயின் போன்றது. நல்ல படங்கள் கொடுத்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள், கொண்டாடுவார்கள். என்னிடம் இப்போது காரே இல்லை. எல்லா காரையும் விற்றுவிட்டேன். அதனால் தான் ஓட்டுப்போட சைக்கிளில் சென்றேன்'' என்றார்.