என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வட இந்திய திருத்தலங்களில் இந்து மக்கள் அதிகமாக வந்து வழிபடும் ஒரு கோயிலாக ராமர் கோயில் உள்ளது. அயோத்தியில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இடங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் 'த சரயு என்கிளேவ்' என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவிலும் அந்த இடம் அமைந்துள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் மும்பை, அலிபாக் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் சில நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே இடங்களை வாங்கியுள்ளார்களாம். அலிபாக் என்பது தீவுப் பகுதி. அங்கு அமிதாப் விரைவில் பார்ம் அவுஸ் ஒன்றை கட்டப் போகிறாராம்.