பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் |
பாலிவுட் சினிமாவில் கடந்த 2011ல் இருந்து நடித்து வருபவர் பரிணிதி சோப்ரா. என்றாலும் அவரது திறமைகேற்ற வேடங்கள் கிடைத்து இன்னும் அவர் முன்னணி நடிகையாக வளரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், சினிமாவில் முன்னேற திறமை இருந்தால் மட்டும் போதாது. சில விசயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். நாம் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நான் வாய்ப்புகளுக்காக எந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடத்திலும் நெருங்கி பழகுவதில்லை. அதனால்தான் எனக்கு வெயிட்டான வேடங்கள் கிடைப்பதில்லை. எனது திறமையை மதித்து வாய்ப்பு தருபவர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் பரிணிதி சோப்ரா. இப்படி அவர் தனது நிலைபாட்டை வெளிப்படையாக கூறியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.