சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

பாலிவுட் சினிமாவில் கடந்த 2011ல் இருந்து நடித்து வருபவர் பரிணிதி சோப்ரா. என்றாலும் அவரது திறமைகேற்ற வேடங்கள் கிடைத்து இன்னும் அவர் முன்னணி நடிகையாக வளரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், சினிமாவில் முன்னேற திறமை இருந்தால் மட்டும் போதாது. சில விசயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். நாம் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நான் வாய்ப்புகளுக்காக எந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடத்திலும் நெருங்கி பழகுவதில்லை. அதனால்தான் எனக்கு வெயிட்டான வேடங்கள் கிடைப்பதில்லை. எனது திறமையை மதித்து வாய்ப்பு தருபவர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் பரிணிதி சோப்ரா. இப்படி அவர் தனது நிலைபாட்டை வெளிப்படையாக கூறியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.