பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை பொருத்தவரை ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் தொடர்பில் இருப்பவர். தன்னுடைய பர்சனல் விஷயங்கள், சினிமா தகவல்கள் அனைத்தையும் தன் கைப்படவே சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஓணம் வாழ்த்துக்களை கூறியிருந்தார். ஆனால் ஓணம் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து அமிதாப் பச்சன் இப்படி வாழ்த்து சொன்னது ரசிகர்களிடம் குறிப்பாக மலையாளிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே பலரும் அமிதாப்பச்சனை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டனர். அதாவது அமிதாப்பச்சனின் அட்மின் குழுவினர் ஓணம் பண்டிகையை மறந்து விட்டார்களோ என்றும், இல்லை கடந்த வருடம் செப்டம்பர் 14ம் தேதி ஓணம் பண்டிகை வந்ததால் அதை மனதில் வைத்து மறதியாக அமிதாப்பச்சன் இப்போது ஓணம் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறாரோ என்றும் கூட கிண்டலாக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனாலும் இதை கவனித்த அமிதாப் பச்சன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், “பண்டிகை கொண்டாட்டம் என்பது எப்போதுமே ஒரு கொண்டாட்டம் தான்.. அதற்கான மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் அழிவதில்லை. நான் எப்போதுமே என்னுடைய பதிவுகளை சொந்தமாகவே வெளியிடுகிறேன். எனக்கென யாரும் ஏஜென்ட் இல்லை.. இருந்தாலும் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.