வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதா ப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் திரைக்கு வந்து தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அது குறித்த ஒரு போட்டோவை அப்படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதை மறுபதிவு செய்துள்ளார் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படி ஒரு சிறந்த படத்தில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. வைஜெயந்தி பிலிம்ஸின் பெரியோர்களின் ஆசிகள் மறக்க முடியாது. அவர்கள் மீண்டும் எப்போது அழைத்தாலும் இந்த பிராஜெக்ட்டில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபாஸ் கர்ணன் வேடத்திலும், அமிதாப்பச்சன் அஸ்வத்தாமன் வேடத்திலும் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரங்கள் குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளுக்கான விடை கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.