மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி 'அட்வான்ஸ் முறை'யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். 'ஜவான்' படத்தின் தியேட்டர் உரிமை கூட 150 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படியிருக்க டப்பிங் படமான 'புஷ்பா 2' படம் அதைவிட 50 கோடி கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
400 கோடிக்கு அதிகமாக வசூலித்தால் மட்டுமே அந்த 200 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியும். இருந்தாலும் படம் அதை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். 1000 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' எட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.