நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி 'அட்வான்ஸ் முறை'யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். 'ஜவான்' படத்தின் தியேட்டர் உரிமை கூட 150 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படியிருக்க டப்பிங் படமான 'புஷ்பா 2' படம் அதைவிட 50 கோடி கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
400 கோடிக்கு அதிகமாக வசூலித்தால் மட்டுமே அந்த 200 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியும். இருந்தாலும் படம் அதை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். 1000 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' எட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.