சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
'தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு' என்ற சோகம் இந்த வாரம் முடியுமா, அடுத்த வாரம் முடியுமா எனப் பேசிப் பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த 2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிய உள்ள நிலையில் லாபகரமான படங்கள் என ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாமல் உள்ளது.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கோடி வசூலையாவது கடந்ததா என்பதற்கான பதிலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைக்கவில்லை.
அதே சமயம் கடந்த வாரம் வெளியான இரண்டு மலையாளப் படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில், பஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆவேஷம்' படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரணவ் மோகன்லால், தியன் சீனிவாசன், நிவின் பாலி, பாசில் ஜோசப், வினீத் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடுவது மற்ற திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே அதற்குக் காரணம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.