சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி அண்மையில் மெட்ரோ பணியின் காரணமாக ஒரு சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சைத்ராவுக்கு எதுவும் ஆகவில்லை. கார் மட்டும் சேதமாகி உள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் காரின் புகைப்படங்களை வெளியிட்டு மெட்ரோ பணியாளர்களின் அலட்சியத்தை அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் 'போரூர் மேம்பாலத்தின் அடியில் எனது கார் நிற்கும் போது மெட்ரோ பணிகளுக்காக போடப்படும் சிமெண்ட் கலவை கார் மேல் விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. இது அந்த இடத்தில் செல்லும் பைக்கிலோ அல்லது நடந்தோ செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். சிலரின் அஜாக்ரதையால் பல உயிர்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும் நான் அதிகாரிகளிடம் கேட்டுகொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததார்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.