தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சென்னை, தாய்லாந்து, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது துபாயில் நடக்கிறது. இதையடுத்து இறுதி கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களை வெங்கட் பிரபு வெளியிடாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் அவரிடத்தில் அப்டேட் கேட்டு தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அதில், கோட் படத்தின் படப்பிடிப்பு தினமும் இப்படித்தான் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சகோதரிகளான அர்ச்சனாவும், ஐஸ்வர்யாவும் கட்டையால் வெங்கட் பிரபுவின் தலையில் தாக்குவது போல் நிற்க, அவரோ அவர்களைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நின்று கொண்டிருக்கிறார்.